மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் இன்று ஒருநாள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் இன்று (ஜூலை 3) ஒருநாள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிப் பகுதியில் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் இன்று தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் யாரும் அருவிப் பகுதிக்கு வருவதைத் தவிர்த்து, வனத்துறையின் அறிவுறுத்தல்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மழையின் நிலை மற்றும் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை சீரடைந்த பின்னர் சுற்றுலா மையம் மீண்டும் திறக்கப்படும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிப் பகுதியில் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் இன்று தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் யாரும் அருவிப் பகுதிக்கு வருவதைத் தவிர்த்து, வனத்துறையின் அறிவுறுத்தல்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மழையின் நிலை மற்றும் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை சீரடைந்த பின்னர் சுற்றுலா மையம் மீண்டும் திறக்கப்படும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.