கோவை மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.39.8 கோடிக்கு மது விற்பனை!

கோவை: கோவை மண்டலத்தில் நேற்று(மே 7) ஒரே நாளில் மட்டும், மதுக் கடைகளில், 39 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன.


கோவை: கோவை மண்டலத்தில் நேற்று(மே 7) ஒரே நாளில் மட்டும், மதுக் கடைகளில், 39 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன.

ஊரடங்கு காரணமாக, மார்ச், 25 முதல், தமிழகத்தில் மதுக் கடைகள் மூடப்பட்டன. மத்திய அரசு, வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில், ஊரடங்கை தளர்த்த அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழகத்தில், சென்னை உட்பட, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், நேற்று மதுக் கடைகள் திறக்கப்பட்டன. வரிசையில் வந்தவர்களிடம், 'ஆதார்' எண்ணை பெற்ற ஊழியர்கள், 'டோக்கன்' வழங்கி, மது வாங்க அனுமதித்தனர்.

அனைத்து கடைகளிலும் கூட்டம் அதிகம் இருந்தது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும், 170 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகியுள்ளன.

இதில், கோவை மண்டலத்தில் நேற்று ஒருநாள் மட்டும் 39 கோடியே 82 லட்சத்து 71 ஆயிரத்து 125 ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மட்டும் 16 கோடியே 40 லட்சத்து 32 ஆயிரத்து 915 ரூபாய்க்கு மது விற்பனையும், திருப்பூர் 11 கோடியே 86 லட்சத்து 41 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், ஈரோடு மாவட்டத்தில் 8 கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்து 870 ரூபாய்க்கும், நீலகிரி மாவட்டத்தில் 2 கோடியே 88 லட்சத்து 61 ஆயிரத்து 420 ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...