கோவை மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.39.8 கோடிக்கு மது விற்பனை!

கோவை: கோவை மண்டலத்தில் நேற்று(மே 7) ஒரே நாளில் மட்டும், மதுக் கடைகளில், 39 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன.


கோவை: கோவை மண்டலத்தில் நேற்று(மே 7) ஒரே நாளில் மட்டும், மதுக் கடைகளில், 39 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன.

ஊரடங்கு காரணமாக, மார்ச், 25 முதல், தமிழகத்தில் மதுக் கடைகள் மூடப்பட்டன. மத்திய அரசு, வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில், ஊரடங்கை தளர்த்த அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழகத்தில், சென்னை உட்பட, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், நேற்று மதுக் கடைகள் திறக்கப்பட்டன. வரிசையில் வந்தவர்களிடம், 'ஆதார்' எண்ணை பெற்ற ஊழியர்கள், 'டோக்கன்' வழங்கி, மது வாங்க அனுமதித்தனர்.

அனைத்து கடைகளிலும் கூட்டம் அதிகம் இருந்தது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும், 170 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகியுள்ளன.

இதில், கோவை மண்டலத்தில் நேற்று ஒருநாள் மட்டும் 39 கோடியே 82 லட்சத்து 71 ஆயிரத்து 125 ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மட்டும் 16 கோடியே 40 லட்சத்து 32 ஆயிரத்து 915 ரூபாய்க்கு மது விற்பனையும், திருப்பூர் 11 கோடியே 86 லட்சத்து 41 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், ஈரோடு மாவட்டத்தில் 8 கோடியே 67 லட்சத்து 34 ஆயிரத்து 870 ரூபாய்க்கும், நீலகிரி மாவட்டத்தில் 2 கோடியே 88 லட்சத்து 61 ஆயிரத்து 420 ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...