கோவையில் மதுபோதையில் காதலை கிண்டல் செய்த நண்பன் டம்பிள்ஸால் தலையில் அடித்து கொலை..! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் மது போதையில் காதலை கிண்டல் செய்த நண்பனை டம்பிள்ஸ் மூலம் தலையில் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் மது போதையில் காதலை கிண்டல் செய்த நண்பனை டம்பிள்ஸ் மூலம் தலையில் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(20). கோவை கணபதி கே.ஆர்.ஜி நகர் பகுதியில் தங்கியுள்ள இவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். பாலத்துறை பகுதியை சேர்ந்த இவரது நண்பர் மணிகண்டன் (23). கார் மெக்கானிக்காக பணி செய்து வருகிறார்.



சிவக்குமார் ஒரு பெண்னை காதலித்து வந்த நிலையில் அவரது நினைவாக தனது கையில் பிளேடால் கழித்துள்ளார். அதே அறையில் தங்கியிருந்த மணிகண்டன் சிவக்குமாரின் இந்த செயலை கிண்டல் செய்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து, மணிகண்டன் உடற்பயிற்சிக்கு பயன்படுத்தும் டம்பிள்ஸ் கொண்டு சிவக்குமாரின் தலையில் தாக்கியதில் அவர் மரணமடைந்து உள்ளார்.

இருவரும் மது போதையில் இருந்துள்ளதாகவும் தனது காதலை கிண்டல் செய்த காரணத்தால் சிவக்குமாரை மணிகண்டன் கொலை செய்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த சரவணப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...