நீலகிரியில் மதுபிரியர்களின் சமூக இடைவெளிக்காக குடியிருப்பு பகுதிகளுக்கும் சேர்த்து தடுப்புகள் அமைத்த அவலம்! பொதுமக்கள் அதிருப்தி

நீலகிரி: குன்னூர் அருகே மதுப்பிரியர்கள் மதுவினை வாங்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக குடியிருப்பு பகுதிகளையும் சேர்த்து தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


நீலகிரி: குன்னூர் அருகே மதுப்பிரியர்கள் மதுவினை வாங்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக குடியிருப்பு பகுதிகளையும் சேர்த்து தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளை ஒட்டி அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் இப்பகுதி மக்கள் இதனை வேறு இடத்திற்கு மாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்தும் பலனளிக்கவில்லை.

தற்போது ஊரடங்கிற்குப் பின் தனிமனித இடைவெளியோடு மதுப்பிரியர்கள் மதுவினை வாங்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக தடுப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டது.



சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்காக அமைக்கப்பட்ட சுமார் நூறு மீட்டர் தடுப்பு வேலியினை அமைக்கும் போது குடியிருப்புகளையும் சேர்த்து வேலி அமைக்கப்பட்டுள்ளது.



இதனால், குடியிருப்பு வாசிகள் வெளியே வரவும் உள்ளே செல்லவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்ற போது, உயரதிகாரிகள் வந்து முடிவெடுப்பார்கள் என்று கூறுகின்றனர். குடியிருப்பை ஒட்டி அமைந்துள்ள டாஸ்மாக் கடையை நகர் பகுதிக்கு வெளியே அமைத்தால் மட்டுமே தாங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...