நீலகிரியில் மதுபிரியர்களின் சமூக இடைவெளிக்காக குடியிருப்பு பகுதிகளுக்கும் சேர்த்து தடுப்புகள் அமைத்த அவலம்! பொதுமக்கள் அதிருப்தி

நீலகிரி: குன்னூர் அருகே மதுப்பிரியர்கள் மதுவினை வாங்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக குடியிருப்பு பகுதிகளையும் சேர்த்து தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


நீலகிரி: குன்னூர் அருகே மதுப்பிரியர்கள் மதுவினை வாங்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக குடியிருப்பு பகுதிகளையும் சேர்த்து தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளை ஒட்டி அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் இப்பகுதி மக்கள் இதனை வேறு இடத்திற்கு மாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்தும் பலனளிக்கவில்லை.

தற்போது ஊரடங்கிற்குப் பின் தனிமனித இடைவெளியோடு மதுப்பிரியர்கள் மதுவினை வாங்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக தடுப்புகள் அமைக்க திட்டமிடப்பட்டது.



சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்காக அமைக்கப்பட்ட சுமார் நூறு மீட்டர் தடுப்பு வேலியினை அமைக்கும் போது குடியிருப்புகளையும் சேர்த்து வேலி அமைக்கப்பட்டுள்ளது.



இதனால், குடியிருப்பு வாசிகள் வெளியே வரவும் உள்ளே செல்லவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்ற போது, உயரதிகாரிகள் வந்து முடிவெடுப்பார்கள் என்று கூறுகின்றனர். குடியிருப்பை ஒட்டி அமைந்துள்ள டாஸ்மாக் கடையை நகர் பகுதிக்கு வெளியே அமைத்தால் மட்டுமே தாங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...