குன்னூர் அருகே நாய், காட்டு பன்றி, பூனை உள்ளிட்ட விலங்குகள் மர்மமான முறையில் மரணம்; போலீசார் விசாரணை

நீலகிரி: குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் நாய், காட்டு பன்றி, பூனை மற்றும் காக்கைகள் உள்ளிட்டவை இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி: குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் நாய், காட்டு பன்றி, பூனை மற்றும் காக்கைகள் உள்ளிட்டவை இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வள்ளுவர் நகர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட நாய்கள், ஒரு காட்டுப்பன்றி, ஒரு பூனை மற்றும் 10க்கும் மேற்பட்ட காக்கைகள் தேயிலை தோட்டங்களுக்கு இடையே மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்த இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



இது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ துறை மண்டல இணை இயக்குனர் விடியப்பன் மற்றும் கால் நடை மருத்துவர் ராஜ முரளி ஆகியோர் இறந்த உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்த பகுதியை சுற்றிலும் வனப்பகுதிகள் நிறைந்துள்ளதால் வனவிலங்குகள் ஏதாவது இறந்துள்ளதா? என்று அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் சிக்கன் கழிவுகளில், புற்களை அழிக்கும் விஷ மருந்து கலந்திருந்ததை இவை உண்டதால் இறந்திருக்கக் கூடும் என்று தகவல் தெரிவிக்கிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...