குன்னூர் அருகே நாய், காட்டு பன்றி, பூனை உள்ளிட்ட விலங்குகள் மர்மமான முறையில் மரணம்; போலீசார் விசாரணை

நீலகிரி: குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் நாய், காட்டு பன்றி, பூனை மற்றும் காக்கைகள் உள்ளிட்டவை இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி: குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் நாய், காட்டு பன்றி, பூனை மற்றும் காக்கைகள் உள்ளிட்டவை இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வள்ளுவர் நகர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட நாய்கள், ஒரு காட்டுப்பன்றி, ஒரு பூனை மற்றும் 10க்கும் மேற்பட்ட காக்கைகள் தேயிலை தோட்டங்களுக்கு இடையே மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்த இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



இது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ துறை மண்டல இணை இயக்குனர் விடியப்பன் மற்றும் கால் நடை மருத்துவர் ராஜ முரளி ஆகியோர் இறந்த உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்த பகுதியை சுற்றிலும் வனப்பகுதிகள் நிறைந்துள்ளதால் வனவிலங்குகள் ஏதாவது இறந்துள்ளதா? என்று அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் சிக்கன் கழிவுகளில், புற்களை அழிக்கும் விஷ மருந்து கலந்திருந்ததை இவை உண்டதால் இறந்திருக்கக் கூடும் என்று தகவல் தெரிவிக்கிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...