கோவை: தமிழகத்தில் மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இன்று செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4058 ஆக அதிகரித்துள்ளது.
கோவை: தமிழகத்தில் மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இன்று செய்யப்பட்டுள்ள நிலையில் வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4058 ஆக அதிகரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதுதொடர்பாக, இன்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 508 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4058 ஆக அதிகரித்துள்ளது.
இன்று, கோவையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உள்ளது. இதில், 4 பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல, திருப்பூரில் புதிதாக இன்று பாதிப்பு ஏதும் இல்லை. இதனால், திருப்பூரில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 114 ஆக உள்ளது. இதில், 2 பேர் கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேசமயம், நீலகிரியில் இன்று புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நீலகிரியில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 76 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1485 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.