கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சங்கம் போராட்டம்

கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் பணிபுரியும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர் சங்கத்தை சேர்ந்த 500 இக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் பணிபுரியும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர் சங்கத்தை சேர்ந்த 500 இக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஆதிதமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமானது நடைபெற்று வருகின்றது.

22 வார்டுகளில் உள்ள 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு பணியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உரிய தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் மருத்துவ பரிசோதனை நடத்தவேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த இரட்டை சம்பளத்தை வழங்க வேண்டும், காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உட்பட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்றுள்ளதால் நகரின் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...