நீலகிரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை!

நீலகிரி: உதகையில் இன்று G 1 மேற்கு நகர் காவல் நிலையத்தில் 250 காவலர்கள், 50 ஊர்காவல் படையினர் மற்றும் களப்பணியாற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு முதற்கட்டமாக கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது.

நீலகிரி: உதகையில் இன்று G 1 மேற்கு நகர் காவல் நிலையத்தில் 250 காவலர்கள், 50 ஊர்காவல் படையினர் மற்றும் களப்பணியாற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு முதற்கட்டமாக கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. 

கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் வைரஸ் அறிகுறி தென்பட்ட நபர்கள் வசிக்கும் பகுதியை தனிமைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று தென்பட்டு நான்கு பேர் குணமடைந்து 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உதகை அருகே காந்தல் பகுதியில் இருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவர்கள் குணம் அடைந்தனர். அவர்கள் வசித்த வந்த காந்தல் பகுதியை மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தி பாதுகாப்பை ஏற்படுத்தியது. 



இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 34 காவல்துறையினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இன்று உதகை மேற்கு நகர் காவல் நிலையத்தில் 250 காவலர்களுக்கும், 50 ஊர்க்காவல் படையினருக்கு மற்றும் களப்பணியாற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...