திருப்பூர்: திருப்பூரில் கறி வெட்ட பயன்படும் முட்டியை சுத்தம் செய்யும் போது கழுத்தில் அணிந்திருந்த துணியின் நாடா இறுக்கப்பட்டு வாலிபர் இறந்த சம்பவம் குறித்து நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் கறி வெட்ட பயன்படும் முட்டியை சுத்தம் செய்யும் போது கழுத்தில் அணிந்திருந்த துணியின் நாடா இறுக்கப்பட்டு வாலிபர் இறந்த சம்பவம் குறித்து நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் திருப்பூர் -தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம், அய்யபம்பாளையம் பிரிவு, பட்டத்தரசியம்மன் கோவில் அருகில் சக்தி சிக்கன் என்ற கறி கடையில் அங்கேயே தங்கி வேலைபார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஏழுமலை இன்று இரவு வேலை முடிந்து கறி கடையில் உள்ள கறி வெட்ட பயன்படும் முட்டியை அரவை மிஷின் மூலம் சுத்தம் செய்யும் போது எதிர் பாரத விதமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த துணியின் நாடா மாட்டி கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்துள்ளார்.
அருகில் உள்ள ஓட்டல் வேலை செய்பவர்கள் பார்த்து ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏழுமலை இறந்த போது பதிவான சிசிடிவி காட்சிகளை காணும் போது நெஞ்சம் பதைபதைப்பதாக உள்ளது.
திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் திருப்பூர் -தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம், அய்யபம்பாளையம் பிரிவு, பட்டத்தரசியம்மன் கோவில் அருகில் சக்தி சிக்கன் என்ற கறி கடையில் அங்கேயே தங்கி வேலைபார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஏழுமலை இன்று இரவு வேலை முடிந்து கறி கடையில் உள்ள கறி வெட்ட பயன்படும் முட்டியை அரவை மிஷின் மூலம் சுத்தம் செய்யும் போது எதிர் பாரத விதமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த துணியின் நாடா மாட்டி கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்துள்ளார்.
அருகில் உள்ள ஓட்டல் வேலை செய்பவர்கள் பார்த்து ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏழுமலை இறந்த போது பதிவான சிசிடிவி காட்சிகளை காணும் போது நெஞ்சம் பதைபதைப்பதாக உள்ளது.