பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு நியாயவிலைக் கடைகள் மற்றும் ஒரு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு சேவை வழங்கினார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொதுமக்களின் நல்வாழ்வுக்காக புதிய நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த வசதிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.





முதலில், தெற்கு மண்டலம் வார்டு எண்.91க்குட்பட்ட சுகுணாபுரம் மேற்கு கல்கி கார்டன் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண்.73க்குட்பட்ட பொன்னையராஜபுரம் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையும், வார்டு எண்.72க்குட்பட்ட அருணாச்சலம் வீதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.






நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்த பின்னர், பொதுமக்களுக்கு நியாயவிலைப் பொருட்களை வழங்கி வைத்தார் நாடாளுமன்ற உறுப்பினர். கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய ஐந்து மண்டலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த புதிய வசதிகள் அந்த வளர்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.






இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, நகரமைப்புக் குழுத்தலைவர் சந்தோஷ், உதவி ஆணையர்கள் தட்சிணாமூர்த்தி (தெற்கு), நர்மதா (மேற்கு), மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், கார்த்திக் செல்வராஜ், உதவி பொறியாளர்கள் நவநீதகிருஷ்ணன், மஞ்சுளாதேவி, சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...