கோவை: டாஸ்மாக் லஞ்ச பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க அ.தி.மு.க முயற்சிக்கிறது எனவும் சிந்தித்து ஜனநாயகத்தை வாக்காளர்கள் காப்பாற்ற வேண்டும் என மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் செய்த ஆ.ராசா வேண்டுகோள் விடுத்தார்.
கோவை: டாஸ்மாக் லஞ்ச பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க அ.தி.மு.க முயற்சிக்கிறது எனவும் சிந்தித்து ஜனநாயகத்தை வாக்காளர்கள் காப்பாற்ற வேண்டும் என மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் செய்த ஆ.ராசா வேண்டுகோள் விடுத்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஓடந்துரை ஊராட்சிக்குட்பட்ட ஊமப்பாளையம் பகுதியில் இன்று தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஆ.ராசா வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய ஆ.ராசா, அ.தி.மு.க டாஸ்மாக்கில் கிடைக்கும் லஞ்ச பணத்தை கொண்டு வாக்காளர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்
அரசு மதுபானக்கடையில் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் சாதாரணமாக 15 ரூபாய் கூடுதலாக விற்று ஒரு மாதத்தில் முந்நூறு முதல் நானூறு கோடி வரை லஞ்சம் ஈட்டும் அ.தி.மு.க, அந்த பணத்தை வைத்து வாக்கு ஒன்றிற்கு தலா ரூ.500, ரூ.1000 கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம் என திட்டமிட்டுள்ளது.
வாக்காளர்களே அ.தி.மு.க கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் அது உங்களுடையது ஆனால், வாக்களிக்கும் போது ஜனநாயகத்தை மறக்காமல் சிந்தித்து வாக்களியுங்கள், தி.மு.கவிற்கு வாக்களியுங்கள் அப்போது தான் உங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் நபர்கள் பொறுப்பில் இருப்பார்கள் என்று வாக்கு சேகரித்தார்.