நீலகிரி: குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக, பாமக நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என்று உதகையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.
நீலகிரி: குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக, பாமக நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என்று உதகையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.

நாடு முழுவதும் புதிதாக கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திப் பல கட்டங்களாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஏடிசி பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ,ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய திருநாட்டிற்கு ஒளி விளக்கை ஏற்றும் அளவிற்கு மாபெரும் கண்டன பேரணி சென்னையில் நடத்தி காட்டியுள்ளதாகவும் பங்களாதேஷ், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் போன்ற மாநில அரசுகள் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ள நிலையில், ஒரு மதத்தை குறிவைத்தும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை ஒதுக்கி வைக்கும் வகையிலும் தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம் இருக்கின்ற ஒவ்வொரு நாளும் இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் ஆபத்து என்பதை மக்களிடத்தில் எடுத்துச் செல்லவேண்டும் என்றார்.

தமிழகத்தை சேர்ந்த அதிமுக எம்பிக்கள் 11 பேரும், பாமக எம்பி ஒருவர் என மொத்தம் 12 வாக்குகளை மத்திய அரசுக்கு ஆதரவாக குடியுரிமை சட்டத்திற்கு வாக்களித்த இவர்களை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடுவதே தவறு என்று கூறினார். இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், தமுமுக மாவட்ட செயலாளர் சமத் உட்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

நாடு முழுவதும் புதிதாக கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திப் பல கட்டங்களாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஏடிசி பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ,ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய திருநாட்டிற்கு ஒளி விளக்கை ஏற்றும் அளவிற்கு மாபெரும் கண்டன பேரணி சென்னையில் நடத்தி காட்டியுள்ளதாகவும் பங்களாதேஷ், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் போன்ற மாநில அரசுகள் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ள நிலையில், ஒரு மதத்தை குறிவைத்தும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை ஒதுக்கி வைக்கும் வகையிலும் தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம் இருக்கின்ற ஒவ்வொரு நாளும் இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் ஆபத்து என்பதை மக்களிடத்தில் எடுத்துச் செல்லவேண்டும் என்றார்.

தமிழகத்தை சேர்ந்த அதிமுக எம்பிக்கள் 11 பேரும், பாமக எம்பி ஒருவர் என மொத்தம் 12 வாக்குகளை மத்திய அரசுக்கு ஆதரவாக குடியுரிமை சட்டத்திற்கு வாக்களித்த இவர்களை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடுவதே தவறு என்று கூறினார். இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், தமுமுக மாவட்ட செயலாளர் சமத் உட்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.