விடுமுறை தினத்தை முன்னிட்டு யானைகளை காண குவியும் பொதுமக்கள்; சுற்றுலாத்தலமாக மாறிய தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாம்

கோவை: விடுமுறை தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமினை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கோவை: விடுமுறை தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமினை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது



கடந்த 15ம் தேதி துவங்கி 48 நாட்கள் நடைபெறும் இந்த யானைகள் முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 28 கோவில் யானைகள் பங்கேற்றுள்ளன. இந்த முகாமில் யானைகளுக்கு பசுந்தீவனம், நடைப்பயிற்சி, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை பொதுமக்களும் கண்டுகழிக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

பள்ளிகளுக்கு விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக மேட்டுப்பாளையம் யானைகள் முகாமினை காண வந்ததால் சுற்றுலா தளமாக மாறி கூட்டம் அலைமோதியது. முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் நடைப்பயிற்சி, யானைகள் உணவு உட்கொள்வது படுத்து தூங்குவது போன்ற செயல்களை காண யானைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தனியாக பார்வையாளர்களுக்கு தடுப்புகள் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து யானைகளை குழந்தைகளுக்கு காண்பித்து மகிழ்ந்தனர்

கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று யானை முகாமினை பார்வையிட்டனர். 



மேலும், ஒரே இடத்தில் இவ்வளவு கோவில் யானைகளை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததுடன் அவைகள் செய்யும் குறும்பு தனங்களை பார்த்து குழந்தைகள் மிகவும் உற்சாகம் அடைந்தனர். தற்போது யானைகளை காண மக்கள் கூட்டம் அதிக அளவில் தேக்கம்பட்டியில் குவிந்து வருவதால் மக்களுக்காக ஆங்காங்கே சிறு சிறு கடைகள் அமைக்கப்பட்டு யானைகள் முகாம் ஒரு சுற்றுலாத்தலமாக மாறி வருகிறது. 

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....