விடுமுறை தினத்தை முன்னிட்டு யானைகளை காண குவியும் பொதுமக்கள்; சுற்றுலாத்தலமாக மாறிய தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாம்

கோவை: விடுமுறை தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமினை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கோவை: விடுமுறை தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் நடைபெற்று வரும் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாமினை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது



கடந்த 15ம் தேதி துவங்கி 48 நாட்கள் நடைபெறும் இந்த யானைகள் முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 28 கோவில் யானைகள் பங்கேற்றுள்ளன. இந்த முகாமில் யானைகளுக்கு பசுந்தீவனம், நடைப்பயிற்சி, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை பொதுமக்களும் கண்டுகழிக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

பள்ளிகளுக்கு விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக மேட்டுப்பாளையம் யானைகள் முகாமினை காண வந்ததால் சுற்றுலா தளமாக மாறி கூட்டம் அலைமோதியது. முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் நடைப்பயிற்சி, யானைகள் உணவு உட்கொள்வது படுத்து தூங்குவது போன்ற செயல்களை காண யானைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தனியாக பார்வையாளர்களுக்கு தடுப்புகள் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து யானைகளை குழந்தைகளுக்கு காண்பித்து மகிழ்ந்தனர்

கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று யானை முகாமினை பார்வையிட்டனர். 



மேலும், ஒரே இடத்தில் இவ்வளவு கோவில் யானைகளை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததுடன் அவைகள் செய்யும் குறும்பு தனங்களை பார்த்து குழந்தைகள் மிகவும் உற்சாகம் அடைந்தனர். தற்போது யானைகளை காண மக்கள் கூட்டம் அதிக அளவில் தேக்கம்பட்டியில் குவிந்து வருவதால் மக்களுக்காக ஆங்காங்கே சிறு சிறு கடைகள் அமைக்கப்பட்டு யானைகள் முகாம் ஒரு சுற்றுலாத்தலமாக மாறி வருகிறது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...