திருப்பூரில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7042 வேட்பாளர்கள் போட்டி; 1704 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு - மாவட்ட ஆட்சியர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 7042 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகவும், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த முழுமையான பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 7042 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகவும், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த முழுமையான பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளன. இதில் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், பல்லடம், வெள்ளகோயில், திருப்பூர் உள்ளிட்ட ஏழு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் கட்டமாகவும் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட ஆறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9025 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன நிலையில், தற்போது 7042 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகவும், 1704 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், 156 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும் 94 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில், வாக்குப்பதிவிற்கு தேவையான தேர்தல் சீட்டுகளை பிரிக்கும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பார்வையிட்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....