திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 7042 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகவும், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த முழுமையான பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 7042 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகவும், தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த முழுமையான பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளன. இதில் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், பல்லடம், வெள்ளகோயில், திருப்பூர் உள்ளிட்ட ஏழு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் கட்டமாகவும் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட ஆறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9025 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன நிலையில், தற்போது 7042 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகவும், 1704 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், 156 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும் 94 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில், வாக்குப்பதிவிற்கு தேவையான தேர்தல் சீட்டுகளை பிரிக்கும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பார்வையிட்டனர்.