கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள காபி பழம் அறுவடைக்கு தயாரான நிலையில் பழங்களை பறிக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள காபி பழம் அறுவடைக்கு தயாரான நிலையில் பழங்களை பறிக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.

வால்பாறையில் பச்சமலை, பழைய வால்பாறை, வறட்டுப்பாறை. வில்லோனி, புதுத்தோட்டம் மற்றும் குரங்குமுடி பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காபி பயிரிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் பூ பிடித்து காய்த்து டிசம்பர் மாதம் காய் பழுத்து அறுவடைக்கு தயாராகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் போதிய மழை கிடைத்ததால் காபி செடிகளில் அதிகப்படியான காய்கள் காய்த்து பழங்கள் பழுத்து வருகின்றன. அறுவடைக்கு தயாரான காபி பழங்களைப் பறிக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. காபி தோட்டங்களில் விஷ வண்டுகள் அதிகம் இருக்கும் என்பதால் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தலையில் தலை கவசம் அணிந்து காபி பழங்களை பறித்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காபி பழம் அதிகம் பழுத்துள்ளதாக தெரிவித்த தொழிலாளர்கள், இதனால் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக கூறினர்.

வால்பாறையில் பச்சமலை, பழைய வால்பாறை, வறட்டுப்பாறை. வில்லோனி, புதுத்தோட்டம் மற்றும் குரங்குமுடி பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காபி பயிரிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் பூ பிடித்து காய்த்து டிசம்பர் மாதம் காய் பழுத்து அறுவடைக்கு தயாராகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் போதிய மழை கிடைத்ததால் காபி செடிகளில் அதிகப்படியான காய்கள் காய்த்து பழங்கள் பழுத்து வருகின்றன. அறுவடைக்கு தயாரான காபி பழங்களைப் பறிக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. காபி தோட்டங்களில் விஷ வண்டுகள் அதிகம் இருக்கும் என்பதால் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தலையில் தலை கவசம் அணிந்து காபி பழங்களை பறித்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காபி பழம் அதிகம் பழுத்துள்ளதாக தெரிவித்த தொழிலாளர்கள், இதனால் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக கூறினர்.