கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் தொடரும் உயிர் பலிகள்; உயிர் பலியை தடுப்பதா? மறைப்பதா?

கோவை: தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதையடுத்து சுகாதாரத்துறை தனது பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம் காய்ச்சல்கள் பரவுவதை தடுத்தது.

கோவை: தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதையடுத்து சுகாதாரத்துறை தனது பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம் காய்ச்சல்கள் பரவுவதை தடுத்தது.

அதேபோல, காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது. இதனால் நோய் பாதிப்புகளும் குறைந்தது. ஆனால், தமிழகத்தில், பருவமழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் காய்ச்சல்கள் தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக, கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவை உட்பட திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளினால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் அதே நோயாளிகள் டெங்கு காய்ச்சலால் மரணிக்கும் போது டெங்கு காய்ச்சல் என எந்த பதிவும் செய்யப்படுவதில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 14ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் காய்ச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்த மூன்று குழந்தைகள் ஒரே நாளில் பலியாகினர். இந்த உயிர் பலிக்கு காரணம் டெங்கு காய்ச்சல் என தகவல்கள் வெளியாகியது. ஆனால், நிர்வாகத் தரப்பில் இந்த குழந்தைகளின் மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் நேற்று கோவை அரசு மருத்துவமனையில் டெங்குப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமிகள் பலியான சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த செல்வத்தின் மகள் மித்ரா (11) அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் குழந்தை டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதேபோல, கோவை அத்திப்பாளையத்தை சேர்ந்த குப்புசாமி மனைவி கமலா (65). கடந்த டிசம்பர் 18ம் தேதி டெங்கு பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கமலா நேற்று இரவு உயிரிழந்தார்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....