நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதியில் 2 பொலிரோ வாகனங்களை திருடிச் சென்ற நபரை சேலம் ஏற்காட்டில் காவல்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி பகுதியில் 2 பொலிரோ வாகனங்களை திருடிச் சென்ற நபரை சேலம் ஏற்காட்டில் காவல்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரைபில்ரேஞ் பகுதியில் வசித்து வருபவர் ஜெயபால்.

இவர் தேனாடு பகுதியில் நிறுத்திவிட்டு சென்ற பொலிரோ ஜீப் மற்றும் வேன் காணாமல் போனதையடுத்து, கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மாேகன் உத்தரவின் பேரில் குன்னூர் காவல் ஆய்வாளர் ஜெயமுருகன் தலைமையில், துணை ஆய்வாளர்கள் வேல்முருகன், சுரேந்தர் மற்றும் ஜார்ஜ் கொண்ட குழு அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், சேலம் ஏற்காடு பகுதியில் உள்ள ஒரு சோலையில் இரண்டு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இதைதொடர்ந்து ஏற்காடு விரைந்து சென்ற தனிப்படையினர், இரண்டு வாகனங்களை மீட்டனர்.
பின்னர், சேலம் ஏற்காடு பகுதியைச் சேர்ந்த சிவராமன் மகன் விஜி (23) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் இரண்டு வாகனங்கள் திருடியதை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரைபில்ரேஞ் பகுதியில் வசித்து வருபவர் ஜெயபால்.

இவர் தேனாடு பகுதியில் நிறுத்திவிட்டு சென்ற பொலிரோ ஜீப் மற்றும் வேன் காணாமல் போனதையடுத்து, கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மாேகன் உத்தரவின் பேரில் குன்னூர் காவல் ஆய்வாளர் ஜெயமுருகன் தலைமையில், துணை ஆய்வாளர்கள் வேல்முருகன், சுரேந்தர் மற்றும் ஜார்ஜ் கொண்ட குழு அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், சேலம் ஏற்காடு பகுதியில் உள்ள ஒரு சோலையில் இரண்டு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இதைதொடர்ந்து ஏற்காடு விரைந்து சென்ற தனிப்படையினர், இரண்டு வாகனங்களை மீட்டனர்.
பின்னர், சேலம் ஏற்காடு பகுதியைச் சேர்ந்த சிவராமன் மகன் விஜி (23) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் இரண்டு வாகனங்கள் திருடியதை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.