துப்பாக்கி வைத்து ஆயுதபூஜை அர்ஜூன் சம்பத் மீது வழக்கு

துப்பாக்கி, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து ஆயுத பூஜை கொண்டாடியாதை முகநூலில் பதிவு செய்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உக்கடத்தில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கி ,கத்தி, அரிவாள்போன்ற ஆயுதங்கள் வைத்துகடந்த பத்தாம் தேதி ஆயுத பூஜைகொண்டாடினார். இதனை முகநூலிலும்வெளியிட்டார். சட்ட விரோதமாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்தது குறித்து சென்னை, கோவை போன்ற இடங்களில்பல்வேறு அமைப்பினர் காவல்துறையினரிடம்புகார் அளித்தனர்.

இது குறித்த விசாரணை மேற்கொண்ட கோவை சைபர் காவல்துறையினர் விசாரணையில் இத்தகவல் உறுதிப்படுத்திய சைபர் க்ரைம் காவல் உதவி ஆய்வாளர் அனுபல்லவியின் புகாரின் பேரில், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து மத உணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டது 153 பிரிவின் கீழும், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்து மிரட்டுதல் 25(1)ஏ ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...