சாதியைப் பற்றி இழிவுபடுத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவை: பொள்ளாச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவனை சகமாணவர்களின் மத்தியில் சாதியைப் பற்றி இழிவுபடுத்தி பாகுபாடு செய்து தாக்குதல் நடத்திய பள்ளியின் ஆசிரியர் ஓவிய மற்றும்  தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;

பொள்ளாச்சியில் உள்ள A.நாகூர் அரசு மத்திய மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் ஆனந்த் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர். பள்ளிக்கு சென்ற மாணவன் ஆனந்தை பள்ளி ஆசிரியர் ஓவிய, மற்றும் தலைமை ஆசிரியர் சகமானவர்கள் மத்தியில் அம்மாணவனை தாழ்த்தப்பட்ட சாதி என்று இழிவுபடுத்தியும் படிப்பதற்கு தகுதி இல்லையென்றும் கூறியும், மாணவனை தாக்கியுள்ளனர். தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரை கேட்டபோது, படிக்க வைப்பதற்கு விருப்பம் இருந்தால் இங்கு படிக்க வையுங்கள் இல்லை என்றால் டி.சி வாங்கிக்கொண்டு செல்லுமாறும் கூறினர். பெற்றோரிடம் மறைமுகமாக சாதியை பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் பேசியது அவமானமாக இருந்ததாகவும், பின்னர் ஆனந்தை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு  அனுமதித்து. இது தொடர்பாக கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்து நாட்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் மீது உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும், ஆனந்த் மற்றும் பெற்றோர்க்கு உடனடி நிவாரணம் வழங்கவும், மாணவன் அப்பள்ளியில் படிப்பை மேற்கொள்ள நிர்வாகம் தகுந்த ஏற்பாடு செய்யவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...