மனைவி தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருந்த கணவனுக்கு ஆயுள்தண்டனை

திருப்பூர் : அவிநாசி அருகே மனைவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த குடி பழக்கம் கொண்ட கணவனுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூர் : அவிநாசி அருகே மனைவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த குடி பழக்கம் கொண்ட கணவனுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (34). இவரது மனைவி துளசிமணி (21). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். மனோகரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்த காரணத்தால், அடிக்கடி வீட்டில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும், தனது மனைவியிடம், அவரது பெற்றோர் வீட்டில் பணம் வாங்கி வருமாறும் வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2012 ஜூலை 18-ம் தேதி வீட்டில் துளசிமணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, துளசிமணியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இருப்பினும், அன்றிரவே அவர் உயிரிழந்தார். மனைவியின் தற்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்த அவிநாசி போலீஸார் மனோகரனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருப்பூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், மனோகரனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...