தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்காநல்லூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ESI மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட 192 பேர் இரத்த தானம் செய்தனர்.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றது. சிங்காநல்லூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ESI மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து ஜூன் 22, 2026 அன்று இந்த முகாம் நடத்தப்பட்டது.



காலை 9.00 மணிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக செயல் துணைவேந்தர் Dr. கா. சுப்ரமணியன் இந்த இரத்த தான முகாமை துவக்கி வைத்தார். சிங்காநல்லூர் ESI ரத்த வங்கியின் தலைமை மருத்துவர் Dr. உமாசரோஜினி தனது மருத்துவ குழுவினருடன் இம்முகாமை திறம்பட நடத்தி வந்தார்.



இம்முகாமில் பல்கலைக்கழக மாணவ மாணவியர், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 192 பேர் தானமாக இரத்த தானம் செய்தனர். உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இம்முகாம் மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடையே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியது.

இரத்த தானம் செய்வது உயிர் காக்கும் பெருமையான செயல் என்பதை வலியுறுத்தி, தொடர்ந்தும் இது போன்ற முகாம்களை ஏற்பாடு செய்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...