அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து : 3 பேர் படுகாயம்

நீலகிரி : குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிமருந்து நிரப்பும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

நீலகிரி : குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிமருந்து நிரப்பும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இங்குள்ள உற்பத்தி செய்யப்படும் வெடிமருந்துகள் நாட்டின் பாதுகாப்பிற்காக பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மிகவும் பாதுகாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை பி.எம்.சி. செக்சனில் பயோ மாடல் சார்ஜ் மருந்தினை நிரப்பிக் கொண்டிருந்த போது திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சூரஜ் குமார் 80 சதவீத தீக்காயத்துடனும், ராபின் சற்குணமுரளி ஆகியோர் பலத்த காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நாகராஜ் என்பவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோகன் மற்றும் தினேஷ் ஆகியார் மூச்சுத் திணறல் காரணமாக அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...