நீலகிரி : கோத்தகிரி அருகே குத்தகை தொகை வழங்காத பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்திற்கு வட்டாட்சியர் சீல் வைத்ததால், வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சக்திமலையில் வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைத்து உள்ளனர். 1993-ம் ஆண்டில் இருந்து குத்தகை தொகை ஒரு கோடியே 60 லட்சத்து 83 ஆயிரத்து 778 கோடி தராததால் கோத்தகிரி வட்டாட்சியர் சங்கீத ராணி சீல் வைத்தார்.இதனால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த கோபுரத்தில் இருந்து 5-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களுக்கு இணைப்பு உள்ளதால், அவையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செல்போன் கோபுரத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் இயக்குவதற்கு உள்ளே நுழைய முடியாது என்பதால், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவனம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சக்திமலையில் வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைத்து உள்ளனர். 1993-ம் ஆண்டில் இருந்து குத்தகை தொகை ஒரு கோடியே 60 லட்சத்து 83 ஆயிரத்து 778 கோடி தராததால் கோத்தகிரி வட்டாட்சியர் சங்கீத ராணி சீல் வைத்தார்.இதனால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த கோபுரத்தில் இருந்து 5-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களுக்கு இணைப்பு உள்ளதால், அவையும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செல்போன் கோபுரத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் இயக்குவதற்கு உள்ளே நுழைய முடியாது என்பதால், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவனம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.