கோவை : கோவையில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நாளை மதியம் ஒரு மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவை : கோவையில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நாளை மதியம் ஒரு மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும், கோவையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கோவையைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான் மற்றும் ஷேக் சபிபுல்லா ஆகிய 3 பேர் யு.ஏ.பி.ஏ. சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மூவரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போத்தனூர் போலீசார் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சக்திவேல் முன்னிலையில் இன்று மதியம் 3 மணிக்கு விசாரணைக்கு வந்த போது, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். பின்னர், விசாரணை தொடங்கிய நீதிபதி, எதிர்தரப்பு அவகாசம் கேட்டதால் நாளை மதியம் வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த 13-ம் தேதி கோவை மாநகர காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிகாலையில் இருந்தே முகமது உசேன், ஷாஜகான் மற்றும் ஷேக் சபிபுல்லா ஆகியோர் இல்லங்களில் விசாரணை மற்றும் ஆய்வு நடத்தினர். அதன்பின்னர், மூன்று பேரையும் போலீஸ் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து 2 நாள் விசாரித்த போலீசார், அவர்கள் மீது சட்டவிரோத தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும், கோவையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கோவையைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான் மற்றும் ஷேக் சபிபுல்லா ஆகிய 3 பேர் யு.ஏ.பி.ஏ. சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மூவரையும் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போத்தனூர் போலீசார் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சக்திவேல் முன்னிலையில் இன்று மதியம் 3 மணிக்கு விசாரணைக்கு வந்த போது, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். பின்னர், விசாரணை தொடங்கிய நீதிபதி, எதிர்தரப்பு அவகாசம் கேட்டதால் நாளை மதியம் வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த 13-ம் தேதி கோவை மாநகர காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிகாலையில் இருந்தே முகமது உசேன், ஷாஜகான் மற்றும் ஷேக் சபிபுல்லா ஆகியோர் இல்லங்களில் விசாரணை மற்றும் ஆய்வு நடத்தினர். அதன்பின்னர், மூன்று பேரையும் போலீஸ் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து 2 நாள் விசாரித்த போலீசார், அவர்கள் மீது சட்டவிரோத தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.