திருப்பூரில் சாலை விரிவாக்கப் பணியின் போது மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

திருப்பூர் : திருப்பூர் அருகே சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பத்தை மாற்றி வைக்கும் போது, அடுத்தடுத்து மின் கம்பங்கள் முறிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் : திருப்பூர் அருகே சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பத்தை மாற்றி வைக்கும் போது, அடுத்தடுத்து மின் கம்பங்கள் முறிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மின் கம்பத்தை மாற்றியமைக்க ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக 3 மின் கம்பங்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக முறிந்து விழுந்தது. இதில், வேலை செய்து கொண்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு (24) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 



அதேபோல, இசக்கிமுத்து (27) என்பவர் தலையில் பலத்த காயத்துடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு பிழைப்பதற்காக வந்த இடத்தில் நடந்த இந்த துயர சம்பவம் உடன் வேலை செய்பவர்கள் மத்தியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...