கோவை மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 15, 17 மற்றும் 20 ஆகிய வார்டுகளில் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 15, 17 மற்றும் 20 ஆகிய வார்டுகளில் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 20-வது வார்டுக்குட்பட்ட சீரநாயக்கன்பாளையத்திலுள்ள நாய்கள் காப்பகத்தில் போதுமான வசதிகள் உள்ளனவா..? என்பது குறித்தும், 15-வது வார்டு பி.கே.புதூர் பகுதியிலுள்ள மாநகராட்சி நகர்நல மையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான மருத்துவ வசதிகள் போதுமானதாக உள்ளதா என்பது பற்றியும் அய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பி.கே.புதூர் பகுதியில் ரூ. 49.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நகர்நல மையம் கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 



பின்னர், 17-வது வார்டு கவுண்டம்பாளையம் பகுதியிலுள்ள பழைய குப்பைக்கிடங்கு வளாகத்தில் தோட்டக்கழிவுகள், மக்கும் குப்பைகள் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளையும், பழைய குப்பைக் கிடங்கு பகுதியில் புல் மேடுகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். 



இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். 

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...