கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 15, 17 மற்றும் 20 ஆகிய வார்டுகளில் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 15, 17 மற்றும் 20 ஆகிய வார்டுகளில் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 20-வது வார்டுக்குட்பட்ட சீரநாயக்கன்பாளையத்திலுள்ள நாய்கள் காப்பகத்தில் போதுமான வசதிகள் உள்ளனவா..? என்பது குறித்தும், 15-வது வார்டு பி.கே.புதூர் பகுதியிலுள்ள மாநகராட்சி நகர்நல மையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான மருத்துவ வசதிகள் போதுமானதாக உள்ளதா என்பது பற்றியும் அய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பி.கே.புதூர் பகுதியில் ரூ. 49.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நகர்நல மையம் கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், 17-வது வார்டு கவுண்டம்பாளையம் பகுதியிலுள்ள பழைய குப்பைக்கிடங்கு வளாகத்தில் தோட்டக்கழிவுகள், மக்கும் குப்பைகள் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளையும், பழைய குப்பைக் கிடங்கு பகுதியில் புல் மேடுகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 20-வது வார்டுக்குட்பட்ட சீரநாயக்கன்பாளையத்திலுள்ள நாய்கள் காப்பகத்தில் போதுமான வசதிகள் உள்ளனவா..? என்பது குறித்தும், 15-வது வார்டு பி.கே.புதூர் பகுதியிலுள்ள மாநகராட்சி நகர்நல மையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான மருத்துவ வசதிகள் போதுமானதாக உள்ளதா என்பது பற்றியும் அய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பி.கே.புதூர் பகுதியில் ரூ. 49.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நகர்நல மையம் கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், 17-வது வார்டு கவுண்டம்பாளையம் பகுதியிலுள்ள பழைய குப்பைக்கிடங்கு வளாகத்தில் தோட்டக்கழிவுகள், மக்கும் குப்பைகள் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளையும், பழைய குப்பைக் கிடங்கு பகுதியில் புல் மேடுகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.