கோவை : கோவையில் திருமணம் ஆகாமல் தங்கும் ஆண்கள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என விளம்பரம் செய்த ஒயோ சர்வீஸ் அபார்ட்மெண்டிற்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
கோவை : கோவையில் திருமணம் ஆகாமல் தங்கும் ஆண்கள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என விளம்பரம் செய்த ஒயோ சர்வீஸ் அபார்ட்மெண்டிற்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
நவ இந்தியா பகுதியில் ஒயோ என்ற சர்வீஸ் அபார்ட்மெண்ட் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் திருமணம் ஆகாமல் தங்கும் ஆண்கள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தனர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விளம்பரத்தை சுட்டிக் காட்டி, இது சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் வகையில் இருப்பதாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரிக்கக் காரணமாக அமையும் வகையில் இருப்பதாகக் கூறி, அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி தெற்கு வட்டாட்சியர் தேவனாதன் தலைமையிலான அதிகாரிகள் ஒயோ அபார்ட்மெண்டிற்கு அதிரடியாக சீல் வைத்தனர். இந்த நடவடிக்கைக்கு மாதர் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.