கோவையில் சர்ச்சைக்குரிய விளம்பரம் வெளியிட்ட ஒயோ சர்வீஸ் அபார்ட்மெண்டிற்கு அதிகாரிகள் சீல்

கோவை : கோவையில் திருமணம் ஆகாமல் தங்கும் ஆண்கள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என விளம்பரம் செய்த ஒயோ சர்வீஸ் அபார்ட்மெண்டிற்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.


கோவை : கோவையில் திருமணம் ஆகாமல் தங்கும் ஆண்கள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என விளம்பரம் செய்த ஒயோ சர்வீஸ் அபார்ட்மெண்டிற்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். 

நவ இந்தியா பகுதியில் ஒயோ என்ற சர்வீஸ் அபார்ட்மெண்ட் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் திருமணம் ஆகாமல் தங்கும் ஆண்கள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தனர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விளம்பரத்தை சுட்டிக் காட்டி, இது சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் வகையில் இருப்பதாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரிக்கக் காரணமாக அமையும் வகையில் இருப்பதாகக் கூறி, அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி தெற்கு வட்டாட்சியர் தேவனாதன் தலைமையிலான அதிகாரிகள் ஒயோ அபார்ட்மெண்டிற்கு அதிரடியாக சீல் வைத்தனர். இந்த நடவடிக்கைக்கு மாதர் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...