திருப்பூரில் சுடுகாட்டை உரக்கிடங்காக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

கோவை : திருப்பூர் அருகே பல தலைமுறைகளாக இறந்தவர்களை அடக்கம் செய்து வந்த சுடுகாட்டை உரக்கிடங்காக அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவை : திருப்பூர் அருகே பல தலைமுறைகளாக இறந்தவர்களை அடக்கம் செய்து வந்த சுடுகாட்டை உரக்கிடங்காக அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூரையடுத்த பெரிச்சிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அருந்ததியர் குடியிருப்பு பகுதி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இக்குடியிருப்பு பகுதியின் அருகிலேயே இறந்தவர்களை அடக்கம் செய்யும் சுடுகாடாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மூன்று தலைமுறைகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். 



இந்த நிலையில், சுடுகாடு அமைந்துள்ள இடத்தில் உரக்கிடங்கு அமைக்கும் முயற்சியில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது இதனை அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அப்போது, தலைமுறை தலைமுறையாக இறந்தோரை அடக்கம் செய்து, வருடாவருடம் அவ்விடத்தில் வழிபாடும் செய்து வருவதாகக் கூறிய பொதுமக்கள், உரக்கிடங்கு அமைக்கும் முயற்சியை கைவிட்டு வேறு இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...