திருப்பூர் : நிர்வாகத்தின் அனுமதியின்றி அரசுப் பேருந்துகளில் பணிபுரியும் நடத்துநர்களுக்கு ரூ. 10 நாணயத்தை தவிர்க்குமாறு சுற்றறிக்கை அனுப்பிய திருப்பூர்-2 கிளை மேலாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
திருப்பூர் : நிர்வாகத்தின் அனுமதியின்றி அரசுப் பேருந்துகளில் பணிபுரியும் நடத்துநர்களுக்கு ரூ. 10 நாணயத்தை தவிர்க்குமாறு சுற்றறிக்கை அனுப்பிய திருப்பூர்-2 கிளை மேலாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை, திருப்பூர் மண்டலம், திருப்பூர் -2 கிளையில் பணிபுரியும் கிளை மேலாளர் என். தனபால், நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக, அவரது பணிமனைக்குத் தொடர்புடைய பேருந்துகளில் பணிபுரியும் நடத்துநர்களுக்கு ரூ. 10 நாணயத்தை தவிர்க்குமாறு எழுத்துப் பூர்வமாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுபோன்ற ஒரு சுற்றறிக்கை, நிர்வாகத்திடம் எந்த ஒப்புதலும் பெறாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு பொதுமக்களிடம் போக்குவரத்துக் கழகத்திற்கு அவப்பேர் ஏற்படுத்துகின்ற வகையில் நடந்து கொண்டுள்ளார். எனவே, இந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதோடு, இதற்குக் காரணமாக இருந்த திருப்பூர்-2 கிளை மேலாளர் என். தனபால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.