நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம், டி.டி.கே. சாலை போன்ற ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம், டி.டி.கே. சாலை போன்ற ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
குன்னூர் பேருந்து நிலைய பகுதி மற்றும் டி.டி.கே. சாலை போன்ற பகுதிகளில் உள்ள 43 கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் நீர்நிலைகளில் மாசு என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வருவாய் துறையினர் சார்பில் தொடர்ந்து கடைகளுக்கு நோட்டீஸ் அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை முதல் இந்தக் கடைகளை ஜே.சி.பி. வாகனம் மூலம் அகற்றும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

டி.டி.கே. சாலை ராணுவ மையத்திற்கு செல்லும் முக்கிய சாலை என்பதாலும், இந்த சாலையில் உள்ள அக்கிரமிப்புக் கடைகளால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் ராணுவ மையத்திற்கு செல்லும் போது சிரமம் ஏற்படுவதாக குன்னூர் ராணுவம் தரப்பில் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதே போன்று, பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டும், இதனை ஒட்டி ஓடும் ஓடை மாசுபடாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குன்னூர் பேருந்து நிலைய பகுதி மற்றும் டி.டி.கே. சாலை போன்ற பகுதிகளில் உள்ள 43 கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் நீர்நிலைகளில் மாசு என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வருவாய் துறையினர் சார்பில் தொடர்ந்து கடைகளுக்கு நோட்டீஸ் அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை முதல் இந்தக் கடைகளை ஜே.சி.பி. வாகனம் மூலம் அகற்றும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

டி.டி.கே. சாலை ராணுவ மையத்திற்கு செல்லும் முக்கிய சாலை என்பதாலும், இந்த சாலையில் உள்ள அக்கிரமிப்புக் கடைகளால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் ராணுவ மையத்திற்கு செல்லும் போது சிரமம் ஏற்படுவதாக குன்னூர் ராணுவம் தரப்பில் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதே போன்று, பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டும், இதனை ஒட்டி ஓடும் ஓடை மாசுபடாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.