பொதுமக்களின் போராட்டம் காரணமாக ஆனைகட்டி சாலையில் உள்ள மதுபானக் கடை தற்காலிகமாக மூடல்

கோவை : ஆனைகட்டி சாலையில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்குள்ள மதுபானக்கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


கோவை : ஆனைகட்டி சாலையில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்குள்ள மதுபானக்கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆனைகட்டி சாலையில் உள்ள ராமகிருஷ்ணா கிராம சுகாதார மையம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், எதிரே வந்து மோதிய இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து நடந்த பகுதியின் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது அருந்திக் கொண்டு வந்த இரு இளைஞர்களினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், விபத்திற்கு காரணமான டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.



இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மதுபோதையில் ஆனைகட்டி ஜம்பு கண்டி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, எண் -2222 என்ற மதுபான கடை தற்காலிகமாக மூடப்படுவதாக வடக்கு வட்டாட்சியர் அறிவித்துள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து கடையை நிரந்தரமாக வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...