ஆர்.எஸ்.புரம் பகுதியில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் : பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு

கோவை : ஆர்.எஸ்.புரம் அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


கோவை : ஆர்.எஸ்.புரம் அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் இயங்கி வரும் மோசன் கணினி பயிற்சி பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று மாலை 7.30 மணியளவில் பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு வெளியே வந்த மாணவி அமிர்தாவை (20), சுரேஷ் (22) என்பவர் கத்தியால் குத்தியுள்ளார். அப்போது, சக மாணவர்கள் சுரேஷை தடுத்துள்ளனர். இருப்பினும், மாணவி அமிர்தா மற்றும் இரு மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர், மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அருகில் இருந்த பொதுமக்கள் சுரேஷை போலீசாரிடம் ஒப்படைத்தனர். 



இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்த போது, இருவரும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கல்லூரி காலத்தில் காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. இருவருக்கும் இடையே காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் அமிர்தா, சுரேஷிடம் பழகுவதை தவிர்த்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சுரேஷ் இன்று அமிர்தாவை கொலை செய்யும் நோக்கில் கத்திப்போன்று கூரிய ஆயுதத்தில் குத்தியுள்ளார். மேலும், சுரேஷ் வேலை பார்த்து வந்த இடத்தில் அமிர்தாவை கொலை செய்வதற்கு என்றே கத்தி போன்ற கூரிய ஆயுதத்தை தயார் செய்தது தெரியவந்துள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...