கோவை : ஆர்.எஸ்.புரம் அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை : ஆர்.எஸ்.புரம் அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் இயங்கி வரும் மோசன் கணினி பயிற்சி பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று மாலை 7.30 மணியளவில் பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு வெளியே வந்த மாணவி அமிர்தாவை (20), சுரேஷ் (22) என்பவர் கத்தியால் குத்தியுள்ளார். அப்போது, சக மாணவர்கள் சுரேஷை தடுத்துள்ளனர். இருப்பினும், மாணவி அமிர்தா மற்றும் இரு மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர், மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அருகில் இருந்த பொதுமக்கள் சுரேஷை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்த போது, இருவரும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கல்லூரி காலத்தில் காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. இருவருக்கும் இடையே காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் அமிர்தா, சுரேஷிடம் பழகுவதை தவிர்த்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சுரேஷ் இன்று அமிர்தாவை கொலை செய்யும் நோக்கில் கத்திப்போன்று கூரிய ஆயுதத்தில் குத்தியுள்ளார். மேலும், சுரேஷ் வேலை பார்த்து வந்த இடத்தில் அமிர்தாவை கொலை செய்வதற்கு என்றே கத்தி போன்ற கூரிய ஆயுதத்தை தயார் செய்தது தெரியவந்துள்ளது.