கொலக்கம்பை அருகே சாலையில் முதியவரை துரத்திய காட்டு யானை : பதற வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையில் நடந்து கொண்டிருந்த முதியவரை துரத்திய சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே ஒற்றை காட்டு யானை ஒன்று சாலையில் நடந்து கொண்டிருந்த முதியவரை துரத்திய சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை பகுதியில் சுற்றிலும் வனப்பகுதியில் நிறைந்துள்ளன. இதன் காரணமாக, பொது மக்களின் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்படும். இந்த நிலையில், கடந்த 22-ம் தேதியன்று இப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை, அங்கு சாலையில் நடந்து கொண்டிருந்த அப்துல் காதர் என்ற முதியவரை துரத்தியது. இதில், அவர் நிலை தடுமாறி அங்கிருந்த கால்வாயில் விழுந்துள்ளார். காயம் பெரிதாக இல்லாததால் இவர் மருத்துவமனைக்கு செல்லாமல் வீ்ட்டிற்கு சென்று விட்டார். இதனால், யானை துரத்திய சம்பவம் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை.



இந்த நிலையில், தனியார் நிறுவனத்தின் சி.சி.டி.வி. கேமரா பதிவை இன்று பார்த்த போது கேமராவில் முதியவரை யானை துரத்தும் படக்காட்சி பதிவாகியுள்ளது. இதையடுத்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...