கோவை : ஆனைமலை வட்டம் ஓடையகுளம் பகுதியில் விவசாய பாசனதிற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : ஆனைமலை வட்டம் ஓடையகுளம் பகுதியில் விவசாய பாசனதிற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு ஒன்று அளித்தனர். அதில், ஆனைமலை வட்டம் ஓடையகுளம் பகுதியில் விவசாயப் பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அச்சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பட்டீஸ்வரன் கூறுகையில், "ஓடையகுளம் பகுதியில் 1,000 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு தென்னை, வாழை, கரும்பு என விவசாயிகள் பயிரிட்டு வருகின்றன. வழக்கமாக விவசாயத்திற்கு மே 15 முதல் ஏப்ரல் 15 வரை பதினொரு மாதங்களுக்கு ஒரு போக விவசாயம் செய்ய ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். வருடத்திற்கு இரண்டு போக விவசாயம் செய்து வரும் நிலையில், கடந்த ஆறு மாதங்களாக தண்ணீர் திறக்கப்படவில்லை. தண்ணீர் திறக்காத காரணத்தால் ஒரு போக விவசாயம் செய்யவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை நம்பி கூலி வேலை செய்யும் 10,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட ஆட்சியர் விவசாய பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்," என வலியுறுத்தினர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு ஒன்று அளித்தனர். அதில், ஆனைமலை வட்டம் ஓடையகுளம் பகுதியில் விவசாயப் பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அச்சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பட்டீஸ்வரன் கூறுகையில், "ஓடையகுளம் பகுதியில் 1,000 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு தென்னை, வாழை, கரும்பு என விவசாயிகள் பயிரிட்டு வருகின்றன. வழக்கமாக விவசாயத்திற்கு மே 15 முதல் ஏப்ரல் 15 வரை பதினொரு மாதங்களுக்கு ஒரு போக விவசாயம் செய்ய ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். வருடத்திற்கு இரண்டு போக விவசாயம் செய்து வரும் நிலையில், கடந்த ஆறு மாதங்களாக தண்ணீர் திறக்கப்படவில்லை. தண்ணீர் திறக்காத காரணத்தால் ஒரு போக விவசாயம் செய்யவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை நம்பி கூலி வேலை செய்யும் 10,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட ஆட்சியர் விவசாய பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்," என வலியுறுத்தினர்.