விவசாய பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் மனு

கோவை : ஆனைமலை வட்டம் ஓடையகுளம் பகுதியில் விவசாய பாசனதிற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : ஆனைமலை வட்டம் ஓடையகுளம் பகுதியில் விவசாய பாசனதிற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் கோவை ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு ஒன்று அளித்தனர். அதில், ஆனைமலை வட்டம் ஓடையகுளம் பகுதியில் விவசாயப் பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் அச்சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பட்டீஸ்வரன் கூறுகையில், "ஓடையகுளம் பகுதியில் 1,000 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு தென்னை, வாழை, கரும்பு என விவசாயிகள் பயிரிட்டு வருகின்றன. வழக்கமாக விவசாயத்திற்கு மே 15 முதல் ஏப்ரல் 15 வரை பதினொரு மாதங்களுக்கு ஒரு போக விவசாயம் செய்ய ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். வருடத்திற்கு இரண்டு போக விவசாயம் செய்து வரும் நிலையில், கடந்த ஆறு மாதங்களாக தண்ணீர் திறக்கப்படவில்லை. தண்ணீர் திறக்காத காரணத்தால் ஒரு போக விவசாயம் செய்யவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை நம்பி கூலி வேலை செய்யும் 10,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட ஆட்சியர் விவசாய பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்," என வலியுறுத்தினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...