டெல்லி : ஆர்.பி.ஐ., (ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா) துணை கவர்னர் ராஜினாமா விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி : ஆர்.பி.ஐ., (ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா) துணை கவர்னர் ராஜினாமா விரால் ஆச்சார்யா ராஜினாமா செய்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் முரண் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல் சில மாதங்களுக்கு முன்னர், தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் துணை கவர்னராக இருக்கும் வைரல் ஆச்சார்யா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது பணிக்காலம் முடிய இன்னும் 6 மாதம் இருக்கும் நிலையில் அவர் இந்த பதவியை துறந்துள்ளார். ராஜினாமாவுக்கான உண்மையான காரணம் ஏதும் வெளியாகவில்லை.
அதேவேளையில், இன்னும் இரண்டு வாரத்தில் மத்தியில் புதியதாக அமைந்துள்ள அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜி.டி.பி விகிதம் குறைந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் முரண் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல் சில மாதங்களுக்கு முன்னர், தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் துணை கவர்னராக இருக்கும் வைரல் ஆச்சார்யா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது பணிக்காலம் முடிய இன்னும் 6 மாதம் இருக்கும் நிலையில் அவர் இந்த பதவியை துறந்துள்ளார். ராஜினாமாவுக்கான உண்மையான காரணம் ஏதும் வெளியாகவில்லை.
அதேவேளையில், இன்னும் இரண்டு வாரத்தில் மத்தியில் புதியதாக அமைந்துள்ள அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜி.டி.பி விகிதம் குறைந்துள்ளது.