மேட்டுப்பாளையத்தில் மலைவாழ் மக்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் மலைவாழ் மக்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தில் வனத்துறை மூலம் 25 குடும்பங்களுக்கு கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.

கோவை : மேட்டுப்பாளையத்தில் மலைவாழ் மக்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தில் வனத்துறை மூலம் 25 குடும்பங்களுக்கு கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சர பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. கால்நடை வளர்ப்பு பிரதானமாக இருக்கும் இந்த பகுதிகளில் அண்மையில் வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வனத்துறை கடுமையான கட்டுபாடுகள் விதித்துள்ளன. இதனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாகக் கூறிய மலை வாழ்மக்கள் மற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, வனத்துறை ஏற்பாட்டில் தமிழக அரசின் விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக, மேட்டுப்பாளையம் வனச்சரக எல்லைக்குட்பட்ட கீழ்பில்லூர், கீழ்செங்கலூர் மற்றும் விளாமரத்தூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் அசில் ரகம் என்ற வகை கோழி குஞ்சுகள் 25 குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் இந்நிகழ்வில் கலந்துகொன்டு பயனாளிகளுக்கு இலவச கோழி குஞ்சுகளை வழங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில் கோழிக்கூண்டுகள் தயார் செய்வதற்கான அரசு உதவித்தொகை ரூ. 2,500 மற்றும் பயிற்சி உதவித் தொகை ரூ.150 சேர்த்து, ரூ. 2,650 வீதம், 25 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வழங்கப்பட உள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...