மேட்டுப்பாளையத்தில் மலைவாழ் மக்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் மலைவாழ் மக்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தில் வனத்துறை மூலம் 25 குடும்பங்களுக்கு கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.

கோவை : மேட்டுப்பாளையத்தில் மலைவாழ் மக்களுக்கு விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தில் வனத்துறை மூலம் 25 குடும்பங்களுக்கு கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சர பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. கால்நடை வளர்ப்பு பிரதானமாக இருக்கும் இந்த பகுதிகளில் அண்மையில் வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வனத்துறை கடுமையான கட்டுபாடுகள் விதித்துள்ளன. இதனால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாகக் கூறிய மலை வாழ்மக்கள் மற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, வனத்துறை ஏற்பாட்டில் தமிழக அரசின் விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக, மேட்டுப்பாளையம் வனச்சரக எல்லைக்குட்பட்ட கீழ்பில்லூர், கீழ்செங்கலூர் மற்றும் விளாமரத்தூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் அசில் ரகம் என்ற வகை கோழி குஞ்சுகள் 25 குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் இந்நிகழ்வில் கலந்துகொன்டு பயனாளிகளுக்கு இலவச கோழி குஞ்சுகளை வழங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில் கோழிக்கூண்டுகள் தயார் செய்வதற்கான அரசு உதவித்தொகை ரூ. 2,500 மற்றும் பயிற்சி உதவித் தொகை ரூ.150 சேர்த்து, ரூ. 2,650 வீதம், 25 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வழங்கப்பட உள்ளது.

Newsletter

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...