கோவை : மேட்டுப்பாளையத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் தேர் திருவிழா நிகழ்ச்சி இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவை : மேட்டுப்பாளையத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் தேர் திருவிழா நிகழ்ச்சி இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை சாலையில் அமைந்துள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் தேர் திருவிழா நிகழ்ச்சி இன்று கொடி ஏற்று நிகழ்வுடன் வெகு விமர்ச்சியாக துவங்கியது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று காலை ஆலய வளாகத்தில் பங்கு பாதிரியார் ரொசாரியோ தலைமையில் சிறப்பு திருப்பலி எழுச்சி நடைபெற்றது. இதனையடுத்து, மாதா உருவம் பொரிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பிராத்தனை நடத்தபட்டு ஆலயத்தை சுற்றி கொடிமரம் வரை ஊர்வலமாக எடுத்து வரபட்டது. பின்னர், மேட்டுப்பாளையம் வட்டார முதன்மை குரு பங்குத்தந்தை அருட்திரு ஜேக்கப் தலைமையில் 50அடி உயரம் கொண்ட கொடிமரத்தில் இயேசுவின் புகழ்பாடி கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கொடியேற்று நிகழ்வில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு ஆண்டவரை வழிபட்டனர். மேலும், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்விழா நகழ்ச்சியை வரும் 30-ம் தேதி இரவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை சாலையில் அமைந்துள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் தேர் திருவிழா நிகழ்ச்சி இன்று கொடி ஏற்று நிகழ்வுடன் வெகு விமர்ச்சியாக துவங்கியது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று காலை ஆலய வளாகத்தில் பங்கு பாதிரியார் ரொசாரியோ தலைமையில் சிறப்பு திருப்பலி எழுச்சி நடைபெற்றது. இதனையடுத்து, மாதா உருவம் பொரிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பிராத்தனை நடத்தபட்டு ஆலயத்தை சுற்றி கொடிமரம் வரை ஊர்வலமாக எடுத்து வரபட்டது. பின்னர், மேட்டுப்பாளையம் வட்டார முதன்மை குரு பங்குத்தந்தை அருட்திரு ஜேக்கப் தலைமையில் 50அடி உயரம் கொண்ட கொடிமரத்தில் இயேசுவின் புகழ்பாடி கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கொடியேற்று நிகழ்வில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு ஆண்டவரை வழிபட்டனர். மேலும், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்விழா நகழ்ச்சியை வரும் 30-ம் தேதி இரவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.