கோவை : பதவியை ராஜினாமா செய்வது குறித்த கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்றும், உரிய நேரத்தில் தலைவர் சரியான முடிவெடுப்பார் என திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்தார்.
கோவை : பதவியை ராஜினாமா செய்வது குறித்த கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்றும், உரிய நேரத்தில் தலைவர் சரியான முடிவெடுப்பார் என திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்தார்.
தண்ணீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணத தமிழக அரசைக் கண்டித்து திருப்பூர் மாநகர மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலிக்குடங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்தும், தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணாத தமிழக அரசு பதவி விலகக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், முன்னாள் அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான வெள்ளக்கோவில் சாமிநாதன் கலந்து கொண்டார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை உள்ள நிலையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. கேரள அரசு தண்ணீர் தர முன்வந்ததையும், தமிழக அரசு மறுத்துள்ளது கண்டனத்துக்குரியது. இளைஞரணி மாநில செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய கடிதம் அனுப்பப்பட்டதாக வந்த தகவல்களில் உண்மையில்லை,” எனக் கூறினார்.

தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்காக பதவியை விட்டுகொடுப்பீர்களா என்ற கேள்விக்கு, தி.மு.க. தலைவர் உரிய நேரத்தில் சரியான முடிவெடுப்பார், இப்போதைக்கு கடிதம் எதுவும் வழங்கவில்லை என அவர் தெரிவித்தார்.
தண்ணீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணத தமிழக அரசைக் கண்டித்து திருப்பூர் மாநகர மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் மாநகராட்சி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலிக்குடங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்தும், தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணாத தமிழக அரசு பதவி விலகக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், முன்னாள் அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான வெள்ளக்கோவில் சாமிநாதன் கலந்து கொண்டார்.

அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை உள்ள நிலையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. கேரள அரசு தண்ணீர் தர முன்வந்ததையும், தமிழக அரசு மறுத்துள்ளது கண்டனத்துக்குரியது. இளைஞரணி மாநில செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய கடிதம் அனுப்பப்பட்டதாக வந்த தகவல்களில் உண்மையில்லை,” எனக் கூறினார்.

தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்காக பதவியை விட்டுகொடுப்பீர்களா என்ற கேள்விக்கு, தி.மு.க. தலைவர் உரிய நேரத்தில் சரியான முடிவெடுப்பார், இப்போதைக்கு கடிதம் எதுவும் வழங்கவில்லை என அவர் தெரிவித்தார்.