கோவை : சி3 - சாயிபாபாகாலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 50 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் காவலர் உடற்பயிற்சி கூடம் தொடக்க விழா நடைபெற்றது.
கோவை : சி3 - சாயிபாபாகாலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 50 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் காவலர் உடற்பயிற்சி கூடம் தொடக்க விழா நடைபெற்றது.
கோவை மாநகரில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு விரைந்து கைது செய்யவும் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகர காவல்துறையின் முயற்சியில் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல, பழைய காவல் நிலையங்கள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில், கோவை சி3 - சாயிபாபாகாலனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 8 லட்சம் மதிப்பீட்டில் 50 கண்காணிப்பு கேமராக்களும், 4.5 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சியும் சாலையும், 16 லட்சம் மதிப்பீட்டில் லிப்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழாவானது சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண், துணை ஆணையாளர் சட்டம் ஒழுங்கு பாலாஜி சரவணன், குற்றப்பிரிவு ஆணையாளர் பெருமாள் மற்றும் உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் சாய்பாபா காலனி பகுதியைச் சுற்றியுள்ள சமூக அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.
