நீட் தேர்வு சட்டவடிவு கொண்டு வரும் போது ஆதரித்த தி.மு.க. தற்போது எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

திருப்பூர் : நீட் தேர்விற்கு சட்ட வடிவு கொண்டு வரும் போது ஆதரித்த தி.மு.க. தற்போது எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : நீட் தேர்விற்கு சட்ட வடிவு கொண்டு வரும் போது ஆதரித்த தி.மு.க. தற்போது எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி பள்ளியை திறந்து வைத்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது :- நீட் தேர்விற்கு சட்டவடிவு கொண்டு வரும் போது ஆதரித்ததே தி.மு.க. இன்று அமல்படுத்தப்பட்டவுடன் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் முயற்சி எடுத்து வெற்றிகரமாக விலக்கு பெற்றால், என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். முன்னாள் முதலமைச்சர் அம்மா இருந்தபோதே நீட் தேர்விற்கு விலக்கு கேட்டு வருகிறோம். தற்போதைய அரசும் பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறது. தமிழக அரசு பள்ளி கல்வித்துறைக்கு 28,757 கோடியே 33 லட்சம் ஒதுக்கினாலும் கூட இன்னும் பல்வேறு பணிகள் உள்ளன. அதற்காக இதுவரை 102 கோடி வரை பல்வேறு சமூக அமைப்புகள் வழங்கியுள்ளன. 



அரசு பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. தரச்சான்று பெற்ற பின்பு தனியார் பள்ளிகள் நடைமுறையைப் பின்பற்றாத நிலை இருந்தால், அவற்றை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு முடிவை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் 85 சதவிகிதம் மருத்துவ படிப்பிற்கான இடம் அந்த மாநிலத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே அந்த சலுகையினை மீறி இடம்பெற முடியும். முழுமையாக வேறு மாநிலத்தவர் பெற முடியாது. பள்ளிகளுக்குப் பாடப்புத்தகங்கள் அனுப்புவதில் தொய்வு ஏற்பட்டது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளும் தமிழக அரசு பாடத்திட்டத்தை அதிகளவில் அச்சிட்டு வருகின்றன. இதன்மூலம், இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது, இவ்வாறு கூறினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...