முழுவீச்சில் நடக்கும் கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகள்

கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.

கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார்.

கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் சி.ஆர்.இ.டி.ஏ.ஐ.யின் 13-வது வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கலந்து கொண்டார். அப்போது, அரசின் தலையீட்டிற்காக காத்திருக்காமல் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கான பணிகளை கோவையில் உள்ள தொழில்துறையினர், கூட்டமைப்பினர், தொழில்முனைவோர் தங்களது தோல்களில் சுமந்து செல்வது பாராட்டுக்குரியது என்றார். 



"கோவை மாவட்டம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைந்து வருவதை நாம் காண்கிறோம். இனி வரும் காலங்களில் தயாரிப்புத் துறையில் மேலும் வளர்ச்சியடைய பாதுகாப்புத்துறையின் ராணுவ தளவாட உற்பத்தி மையம் பெரும் பங்காற்ற உள்ளது," என்றார் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி.

மேலும், சி.ஆர்.இ.டி.ஏ.ஐ. மற்றும் பிற தொழில்துறை கூட்டமைப்பினரின் சிறப்பான பங்களிப்பினால் கோவை மாநகர் சிறந்து விளங்குகிறது என அவர் புகழாரம் சூட்டினார். 



இதைத் தொடர்ந்து, சி.ஆர்.இ.டி.ஏ.ஐ.யின் செயலாளர் ராஜிவ் ராமசாமி, நடப்பாண்டின் நடவடிக்கைகளை விளக்கிக் காட்டினார். பின்னர், ஜி.எஸ்.டி. உண்மை பரிசோதனை, ஆர்.இ.ஆர்.ஏ., சி.டி.பி.ஆர். மற்றும் மாநகர அளவிலான திட்டங்கள் பற்றியும் அவர் விவரித்தார். 



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...