நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனின் போது, சமூக சேவை பணியாற்றிய சமூக ஆர்வலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனின் போது, சமூக சேவை பணியாற்றிய சமூக ஆர்வலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் கோடை சீசனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பல்வேறு ஏற்பாடுகளை காவல்துறை செய்திருந்தது. குறிப்பாக, மலர் கண்காட்சி இந்த முறை ஐந்து நாட்கள் நடைபெற்றிருந்த நிலையில், அப்போது சமூக சேவை பணியாற்றிய சுமார் 18 பேர் அரசு தாவரவியல் பூங்கா மட்டுமல்லாமல், நகரில் பல்வேறு இடங்களில் வாகன நெரிசலை தவிர்க்க பெரிதும் உதவினர்.

இதையடுத்து, இந்த சமூக பணியில் பங்கேற்று பணியாற்றிய 18 சமூக ஆர்வலர்களுக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், இது போன்ற சமூகப் பணிகளில் இளைஞர்கள் அதிகமாகக் கலந்து கொண்டு மாவட்டத்திற்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா அவர்களிடம் வலியுறுத்தினார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் கோடை சீசனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பல்வேறு ஏற்பாடுகளை காவல்துறை செய்திருந்தது. குறிப்பாக, மலர் கண்காட்சி இந்த முறை ஐந்து நாட்கள் நடைபெற்றிருந்த நிலையில், அப்போது சமூக சேவை பணியாற்றிய சுமார் 18 பேர் அரசு தாவரவியல் பூங்கா மட்டுமல்லாமல், நகரில் பல்வேறு இடங்களில் வாகன நெரிசலை தவிர்க்க பெரிதும் உதவினர்.

இதையடுத்து, இந்த சமூக பணியில் பங்கேற்று பணியாற்றிய 18 சமூக ஆர்வலர்களுக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், இது போன்ற சமூகப் பணிகளில் இளைஞர்கள் அதிகமாகக் கலந்து கொண்டு மாவட்டத்திற்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா அவர்களிடம் வலியுறுத்தினார்.